பாதிரி கிராமத்தில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா

பாதிரி ஊராட்சி மன்றம் மற்றும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த

பாதிரி கிராமத்தில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது.
இந்த விழாவில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருஷ்ணன் வரவேற்றார்.


செல்வி. ரீனாவின் பரத நாட்டியத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தமிழிசைப் பாடல்களை இரா.அருண்குமார், பெ.பார்த்திபன் ஆகியோர் பாடினர். உழவர் திருநாள் சிறப்புக் கவிதைகளை க் கவிஞர்கள் வந்தை குமரன், க.புனிதவதி, ஊடகவியலாளர்
தமிழ் ராசா ஆகியோர் வாசித்தனர்.
மேலும், 'வெற்றிப் படிக்கட்டுகள்' என்ற தலைப்பில் சீ.கேசவராஜ், 'நாளை நமதே' என்ற தலைப்பில்
வி.எல்.ராஜன், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற தலைப்பில் வந்தை பிரேம், 'ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு' என்ற தலைப்பில் ஜா.தமீம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பள்ளி மாணவன் ல. கோபாலகிருஷ்ணன் 'யோகாசனம்' செய்து காட்டினார்.
பின்னர், ஹைக்கூ கவிஞரும், தமிழ்ச் சங்க ஆலோசகருமான மு.முருகேஷ் நடுவராகப் பங்கேற்ற
‘இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் பயணம் - சிகரத்தை நோக்கியே!,
சிரமத்தை நோக்கியே!’ எனும் தலைப்பிலான சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
'சிகரத்தை நோக்கியே' என்ற அணியில் செயலாளர் பா.சீனிவாசன், இரா.பாஸ்கரன், ஆசிரியை எஸ்.ரஷீனா
ஆகியோரும், 'சிரமத்தை நோக்கியே' என்ற அணியில் துணைத் தலைவர் ம.சுரேஷ் பாபு, பேராசிரியர் க.பூபாலன், இரா.நளினி ஆகியோரும் பங்கேற்றனர். இறுதியில், ‘இன்றைய இளைஞர்களின் பயணம் சிகரத்தை நோக்கியே’ என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார்.
‘நாமும் தமிழும்' என்ற தலைப்பில் மனோஜ் குழுவினரின் குறுநாடகம் நடைபெற்றது. மேலும், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியைத் துணைச் செயலாளர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, இளைஞர்
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ம.பாபு நன்றி கூறினார்.
விழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகைதந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்
Previous Post Next Post